பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சீரங்கத்தம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் 9ஆம் ஆண்டு சித்திரைப் பெருவிழாயொட்டி ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 

News image
சீரங்கத்தம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்கள்.
Updated On :30 ஏப்ரல் 2018, 9:57 pm

DIN

மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயிலில் 9ஆம் ஆண்டு சித்திரைப் பெருவிழாயொட்டி ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 
திருப்போரூரை அடுத்த மானாம்பதி கிராமத்தில் சீரங்கத்தம்மன் கோயில் உள்ளது. இங்கும், செல்லியம்மன், கரைமேலழகி கோயிலிலும் 9ஆம் ஆண்டு சித்திரைப் பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி, சென்னை மேற்கு மாம்பலம் முருகாசிரம சுவாமி சங்கரானந்தா அருளாசியுடன் ஞாயிற்றுக்கிழமை காலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும் மகா தீப ஆராதனையும் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு திருக்கழுகுன்றம் ராமச்சந்திரன் சிவாச்சாரியார் தலைமையில் சீரங்கத்தம்மன் உற்சவருக்கு மகா அபிஷேகம், மகா தீப ஆராதனை, அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. 
மாலை 3 மணிக்கு அம்மன் சிரசில் மணிநாகம், சிங்காரத் திலகம், உடுக்கையுடன் அம்மனைத் தோளில் சுமந்து ஆலயத்தின் உள்ளே வலம் வருதல், அம்மன் பூ ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தல், சென்னை மயிலை வெங்கடேச குருக்கள் தலைமையில் திருவிளக்கு பூஜை ஆகியவை 
நடைபெற்றன. 
அதன் பின், சித்ரா பெளர்ணமி பூஜையின் நிறைவாக சந்திரனுக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. ஜோதி தரிசனமும் நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் மானாம்பதி, திருப்போரூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குடும்ப சுபிட்சம் வேண்டியும், நாடு செழிப்புடன் இருப்பதற்காக மழை வேண்டியும், தீய சக்திகள் அழிந்து மக்களை நல்வழிப்படுத்தவும் அம்மனை வேண்டி இந்த பூஜை நடைபெற்றது.
சித்திரைப் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை சென்னை ராயப்பேட்டை சீரங்கத்தம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள் வி.குமார் செட்டியார், ஆர்.காளிதாஸ், பி.எல்.சரவணன், மணிமேகலை மற்றும் மானாம்பதி கிராம மக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.