ஜோதிடத்தின் ஒன்பதாவது ராசி தனுசு. தமிழ் மாதங்களில் மார்கழி மாதத் துவக்கம் இந்த ராசியில் தான் ஆரம்பமாகும். தனுசு ராசியின் அதிபதி பூரண சுபர் என்று வர்ணிக்கப்படுகின்ற குரு பகவான்.
பஞ்சபூத தத்துவங்களில் நெருப்பு ராசி. இது ஒரு ஆண் தன்மை நிறைந்த ராசி. இந்த ராசியில் பிறக்கும் பெண்கள் கூட ஆண்களில் மனோபாவத்தையே அதிகம் பெற்றிருப்பார்கள். அதிகாரம் அடக்குமுறை எண்ணங்கள் அவர்களிடம் அதிகம் காணப்படும்.
குருவுக்கு நெருங்கிய நண்பர் சூரியன். இங்கு நட்பு என்ற முறையில் நிற்பதால் தனுசு ராசியில் சூரியன் இருந்தால் அந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்கள், எளிதில் கிரகிக்கும் தன்மை கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்களிடம் செல்வம் ஏதாவது ஒருவகையில் கையில் இருந்துகொண்டே இருக்குமாம்.
தந்தையின் மீது மிகுந்த அன்பும் குடும்பத்தின் மீது மரியாதையும் கொண்டவர்கள். உறவினர்களை அனுசரித்து செல்லக்கூடியவர்கள். தனக்குச் சமமான அதிக நண்பர்களைக் கொண்டவர்கள்.
பூஜை புனஸ்காரங்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். ஞானிகளை சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். எதையும் எதிர்பாராமல் செய்யக்கூடியவர்கள். கம்பீரமும், கனிவும் கலந்த குரல் வளம் கொண்டவர்கள். நம்பிக்கை உடைய இவர்கள் பிறர் செய்யும் உதவியை மறக்காதவர்கள்.
ஞானம் சம்பந்தமான தேடல்களையும், சாஸ்திரங்களையும் கற்பதில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். எந்நிலையிலும் தன்னிலை இறங்காதவர்கள். பலருக்கு முன் உதாரணமாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கக்கூடியவர்கள்.
பூர்வீக சொத்தும், சம்பாதிக்கும் வல்லமையும் கொண்டவர்கள். எதிலும் துரிதமும், வேகமும் உடைய இவர்களுக்கு அரசியல் தொடர்பு மற்றும் கௌரவப் பதவிகள் கிடைக்கும். தானம், தர்மம் வழங்குவதில் வல்லவர்கள்.
இவர்களுக்கு ராசி அதிபதியாக குரு இருப்பதால், செல்வச் செழிப்புக்கு ஒருபோதும் குறைவின்றி ஏதாவது ஒரு வகையில் வந்து சேருமாம். ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்யும் காலம் இவர்களுக்கு வாழ்வில் பல ஏற்றங்கள் ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!

மாட் ரென்ஷா, டிம் டேவிட் அதிரடி: வங்கதேசத்துக்கு 197 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியதால் பரபரப்பு
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



