பங்குனி உத்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மற்றொரும் கதையும் உள்ளது. ஆன்மிக அன்பர்கள் அதை தெரிந்துகொள்ளவேண்டாமா?
அது தான் திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்த கதையாகும்! மயிலாப்பூரில் சிவநேசர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் தீவிரமான சிவபக்தர். அவருக்கு பூம்பாவை என்ற மகள் இருந்தாள். ஞானசம்பந்தர் சுவாமிகளின் மகிமையை அறிந்து அவருக்கு தனது மகளை மனம் முடித்துக்கொடுக்க வேண்டும் என்பது சிவநேசரின் எண்ணமாக இருந்தது. ஆனால் விதி வேறு விதமாக விளையாடியது.
ஒருநாள் பூப்பறிப்பதற்காக பூந்தோட்டத்திற்குச் சென்ற பூம்பாவையை பாம்பு தீண்டிவிட, பூம்பாவை இறந்துவிட்டாள். மிகவும் வருத்தமுற்ற சிவநேசர் மகளின் உடலை தகனம் செய்து எலும்மையும் சாம்பலையும் சேமித்து வைத்தார். ஞானசம்பந்தர் மயிலாப்பூர் வந்திருந்த வேளையில் இதுபற்றி அறிந்தார். அவர் உடனடியாக எலும்பு, சாம்பல் அடங்கிய குடத்தை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் தலத்திற்கு கொண்டு வரும்படி சிவநேசரை கேட்டுக்கொண்டார்.
அன்றைய தினம், கபாலீஸ்வரர் உற்சவ தினத்தின் 9-ம் நாள் கபாலீஸ்வரருக்கு திருமண மகோற்சவ தினம். அன்றைய தினம் இறைவனிடம் பூம்பாவைக்காக பதிகம் பாடி உயிர் பெறச் செய்தார். அவர் பதிகம் பாடிய தினம், மகிமை வாய்ந்த பங்குனி உத்திர தினமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர டிரைலர் அறிவிப்பு!
காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மோடி அரசை வீழ்த்தலாம்! - பிரியங்கா காந்தி

அபிஷேக் சர்மா, கிளாசன் அரைசதம் விளாசல்; சிஎஸ்கேவுக்கு 195 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


