குளிர்காலம் தொடங்கியதையடுத்து கேதார்நாத் சிவன் கோயில் நடை இன்று அடைக்கப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய 4 கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்கள் ஆறு மாதம் மட்டும் நடை திறக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆறு மாதங்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 6 மாதத்திற்குக் கோயிலின் நடை அடைக்கப்படுகின்றது. மீண்டும் அக்ஷய திரிதியை நாளில் கோயில் நடை திறக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.