திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்!

திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி...
Published on

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை மாலை திருக்கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது. நவம்பர் 14-ம் தேதி சுப்பிரமணிய சுவாமிக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. 

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா தெரிவித்துள்ளார். 

மேலும், பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com