கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மகரவிளக்கு பூஜைக்காக நாளை மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக நாளை மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:37 pm

DIN

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக நாளை மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. 

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்திப் பெற்றவை. மண்டல மகரவிளக்கு விழாவின்போது ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவது வழக்கம். இந்தாண்டு மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது.

இதற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் நாளை மறுநாள் 17-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. நடை திறந்ததும் ஐயப்பனுக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. 

நவம்பர் 17-ம் தேதி முதல் தொடர்ச்சியாக 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை முடிந்த பின்பு கோயில் நடை அடைக்கப்படும். 3 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 30-ம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக நடை மீண்டும் திறக்கப்படும். 

ஐனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அதுவரை கோயில் நடை திறந்திருக்கும். சபரிமலை தொடர்ச்சியாக 62 நாட்கள் நடை திறந்திருக்கும் என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.