தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாளத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட கிருஷ்ணர் கோயில்!

நேபாளத்தில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் நேற்று திறக்கப்பட்டது. 

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 9:20 am

தினமணி

லலித்பூர்: நேபாளத்தில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயில் மூன்று ஆண்டுகளுக்குப் பின் நேற்று திறக்கப்பட்டது. 

நேபாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான லலித்பூர் கிருஷ்ணர் கோயில் பெரிய அளவில் சேதமடைந்தது. 

17-ம் நூற்றாண்டில் சித்தி நரசிங் மல்லால் என்ற மன்னரால் கட்டப்பட்ட இந்த கலைக் கோயில் நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் அடைந்தது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி புராதன கோயில் தாற்காலிகமாக மூடப்பட்டது.

இதன்பின், கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், கிருஷ்ண பகவான் அவதரித்த ஜென்மாஷ்டமி தினமான நேற்று திறக்கப்பட்டது.

புத்தம் புது பொலிவுடன் காட்சியளிக்கும் லலித்பூர் கிருஷ்ணர் கோயிலைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டனர். இந்திய சீக்கியர் பாணியில் கட்டப்பட்டது இந்தப் புராதன கோயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.