கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழா: பச்சை சாத்தி சுவாமி வீதி உலா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை (செப். 8)

News image

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா எட்டாம் நாளான வியாழக்கிழமை பச்சை சாத்தி எழுந்தருளிய சுவாமி சண்முகர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை (செப். 8) நடைபெறுகிறது.
திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு மிக்க ஆவணித் திருவிழா கடந்த ஆகஸ்ட் 30 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். 
முக்கிய நிகழ்வாக புதன்கிழமை, அருள்மிகு சண்முகப்பெருமான் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளினார். எட்டாம் நாள் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்ந்தார். தொடர்ந்து, பந்தல் மண்டபத்தில் உள்ள சுந்தரராமசுப்பிரமணிய பிள்ளை வகையறா 8 - ஆம் திருவிழா மண்டகப்படியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயிலை அடைந்தார்.
9 -ஆம் நாள் நதிருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், வள்ளியம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.
தேரோட்டம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை (செப். 8) நடைபெறுகிறது. காலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கி, பிள்ளையார் ரதம், சுவாமி தேர் மற்றும் அம்மன் தேர் திருவீதி வலம் வந்து நிலையை அடையும். தேரோட்டத்தையொட்டி, பல்வேறு வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.