எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள் எது தெரியுமா? 

இந்து சமயக் கடவுள்களில் ஒருவரும், தமிழ்க் கடவுள் எனக் கருதப்படுபவருமான முருகப் பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள் எது என்று தெரிந்துகொள்வோம். 

News image
Updated On :3 ஏப்ரல் 2018, 4:44 pm IST

இந்து சமயக் கடவுள்களில் ஒருவரும், தமிழ்க் கடவுள் எனக் கருதப்படுபவருமான முருகப் பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள் எது என்று தெரிந்துகொள்வோம். 

* கந்த புராணம் - இது ஒரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் உணர்ந்து அனுபவிக்க வேண்டியது. கச்சியப்பரால் இயற்றப்பட்டது. 

* திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இது இயற்றப்பட்டது. 

* திருப்புகழ் - முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல் ஆகும். 

* கந்தர் அநுபூதி - அருணகிரிநாத சுவாமிகள் அருளியது கந்தர் அநுபூதி.

* கந்தசஷ்டி கவசம் - பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.

* கந்த குரு கவசம் - ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கவசம் இது.

* வேல் விருத்தம் - முருகப் பெருமானின் கை வேலின் புகழ் கூறுவதை மையமாக வைத்து அருணகிரிநாதர் பாடியதாகும். 

* மயில் விருத்தம் - அருணகிரிநாதர் இயற்றியது இந்நூல். 

* ஷண்முக கவசம் -  ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளியது. 

* கந்தர் கலிவெண்பா - திருச்செந்தூர் முருகனைக் குறித்துப் பாடப்பட்ட ஒரு நூலாகும். இதனைப் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் இயற்றினார். 

* கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் இயற்றிய முருகன் பற்றிய பக்திப் பாடல்கள் கொண்ட நூலாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.