ஹைதராபாதில் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆர்ஜித சேவா டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட ராஜ்குமார் ரெட்டி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் எஸ்.ஆர்.நகர் அருகில் உள்ளது சிவபாக் காலனி. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பலரிடம் ராஜ்குமார்(35) என்பவர் திருப்பதி ஏழுமலையான் ஆர்ஜித சேவைகளான மேல்சாட் வஸ்திரம், பூராபிஷேகம் உள்ளிட்டவற்றுக்கான டிக்கெட்டுகளை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளார்.
எனினும் அவர்களுக்கு உரிய டிக்கெட்டுகளை அளிக்காததால் அவர் மீது சந்தேகம் அடைந்த அவர்கள் எஸ்.ஆர்.நகர் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், ராஜ்குமார் ரெட்டியை திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!
பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!

வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!

பிளாஸ்ட் வசூல் அறிவிப்பு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


