தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

ஆர்ஜித சேவா டிக்கெட் முறைகேடு: இளைஞர் கைது

ஹைதராபாதில் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆர்ஜித சேவா டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட ராஜ்குமார் ரெட்டி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :15 ஜனவரி 2019, 2:37 am IST


ஹைதராபாதில் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆர்ஜித சேவா டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட ராஜ்குமார் ரெட்டி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: 
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் எஸ்.ஆர்.நகர் அருகில் உள்ளது சிவபாக் காலனி. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பலரிடம் ராஜ்குமார்(35) என்பவர் திருப்பதி ஏழுமலையான் ஆர்ஜித சேவைகளான மேல்சாட் வஸ்திரம், பூராபிஷேகம் உள்ளிட்டவற்றுக்கான டிக்கெட்டுகளை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளார். 
எனினும் அவர்களுக்கு உரிய டிக்கெட்டுகளை அளிக்காததால் அவர் மீது சந்தேகம் அடைந்த அவர்கள் எஸ்.ஆர்.நகர் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், ராஜ்குமார் ரெட்டியை திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.