பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பக்தி பரவசத்துடன் 2-வது நாளாக அத்தி வரதரைத் தரிசிக்க குவியும் பக்தர்கள்!

40 ஆண்டுகளுக்குப் பின் காட்சிதரும் ஆதி அத்திவரதரை தரிசிக்கத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

News image
Updated On :2 ஜூலை 2019, 7:16 am

தினமணி

40 ஆண்டுகளுக்குப் பின் காட்சிதரும் ஆதி அத்திவரதரை தரிசிக்கத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் காட்சிதருவார். இந்த அரிய நிகழ்வு நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் 17-ம் தேதி வரை தொடர்ந்து 48 நாட்கள் அத்தி வரதர் பெருவிழா நடைபெறவுள்ளது. 

இப்பெருவிழாவில் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்ய நாடு முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை தந்தவாறு உள்ளனர். 

நேற்று ஒரு நாள் மட்டுமே சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்தி வரதரைப் பக்தி பரவசத்துடன் கோவிந்தா, பெருமாளே, நாராயணா எனக்கூறி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். 

தொடர்ந்து இரண்டாவது நாட்களாக இன்றும் திரளான பக்தர்கள் அத்திவரதரை காணக் குவிந்தவண்ணம் உள்ளனர். நேற்றைய விட இன்று எந்த இடையூறும் இன்றி அத்திவரதரை தரிசிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.