40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அபூர்வ அத்தி வரதரை கடந்த 7 நாட்களில் 6.16 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
கடந்த 7 நாள்களில் இதுவரை சுமார் 6.16 லட்சம் பேருக்கு மேல் தரிசனம் செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று வார விடுமுறை நாள் என்பதால் அதிகாலை 3 மணியிலிருந்து திரளானோர் காஞ்சிபுரம் வருகை புரிந்தனர்.
ஜூலை 1-ஆம் தேதி முதல் அத்திவரதரை தரிசித்த பக்தர்கள் எண்ணிக்கை
ஜூலை 1-ஆம் தேதி: 1 லட்சம்
ஜூலை 2-ஆம் தேதி: 70 ஆயிரம்
ஜூலை 3-ஆம் தேதி: 75 ஆயிரம்
ஜூலை 4-ஆம் தேதி: 45 ஆயிரம்
ஜூலை 5-ஆம் தேதி: 85 ஆயிரம்
ஜூலை 6-ஆம் தேதி: 1.16 லட்சம்
ஜூலை 7-ஆம் தேதி: 1.25 லட்சம்