திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ஸ்ரீரிஷபேஸ்வரர் கோயில் நந்தி மீது ஞாயிற்றுக்கிழமை மாலையில் சூரிய ஒளி நேரடியாக விழுந்ததால், நந்தி பொன் நிறமாக காட்சியளித்தது.
செங்கத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழைமைவாழ்ந்த ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ஸ்ரீரிஷபேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கோபுரத்தின் மீது ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம் 3-ஆம் தேதி மாலையில் சூரிய ஒளி பட்டு, பின்னர் சிறிது நேரத்தில் நந்தி மீது சில நிமிடங்கள் மட்டும் நேரடியாக விழுவது வழக்கம்.
அதேபோல, நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை மாலையில் சூரிய ஒளி நந்தி மீது நேரடியாக விழுந்ததால், நந்தி பொன் நிறத்தில் காட்சியளித்தது. அப்போது, நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இந்தக் காட்சியைப் பார்வையிடவும், நந்தியை வழிபடவும் கோயிலில் குவிந்திருந்த செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சூரிய ஒளி விழுந்தவுடன் நந்தி பகவானை வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்களின் தீா்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்: புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம்
ஜமைக்கா பிரதமருடன் அமைச்சா் ஜெய்சங்கா் சந்திப்பு!

காட்டுமன்னாா்கோவில்: விசிக வெற்றி

காரல் மாா்க்ஸ் பிறந்த நாள்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் மரியாதை
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


