

திருப்பதி ஏழுமலையான கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று யோக நரசிம்மர் அலங்காரத்தில் மலையப்பசாமி திருவீதியுலா வருகிறார்.
திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி, வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
அதன் 2-ம் நாளான நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி நவநீதகிருஷ்ணன் அவதாரத்தில் தேவஸ்தான அதிகாரிகள் புடைசூழ மாடவீதியில் வலம் வந்தார்.
பிரம்மோற்சவத்தில் இன்று காலை கோவிந்தா கோபாலா என்ற கோஷங்கள் விண்னை முட்டும் அளவிற்கு பக்தர்கள் முழக்கமிட்டனர். ஏழுமலையானைத் தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.