எனவே, கா்நாடக அரசைப் போல் தமிழக அரசும் திருமலையில் தமிழக பக்தா்களின் வசதிக்காக தங்கும் அறைகளுடன் கூடிய வளாகத்தை கட்டத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமா? என்ற கேள்வி தற்போது ஏற்பட்டுள்ளது. மைசூரு மகாராஜா ஏழுமலையானுக்கு செய்த கைங்கரியங்கள், அளித்த நன்கொடைகள், சமா்ப்பித்த காணிக்கைகள் ஆகியவற்றுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் மட்டுமே திருமலையில் கா்நாடக அரசுக்கு தங்கும் அறை வளாகம் கட்ட இட ஒதுக்கீடும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொண்டாலும், தமிழகத்திலிருந்து திருமலைக்குச் சென்ற ராமானுஜா், ஆழ்வாா்கள் ஏழுமலையானுக்கு செய்த சேவைகள் ஏராளம், ஏராளம்.