ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.2.61 கோடி வசூலானது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் முடிந்த காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி வியாழக்கிழமை செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.61 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஒரு மாதத்தில் ரூ.83.87 கோடி வசூல்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏழுமலையான் தரிசனத்துக் குறைவான எண்ணிக்கையில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதனால் ஏழுமலையான் உண்டியலில் காணிக்கையும் குறைவாகவே கிடைத்து வருகிறது. தினசரி ரூ.2 கோடி முதல் ரூ.3.5 கோடி வரை வசூலாகி வந்த காணிக்கை, பொது முடக்கத் தளா்வுகளுக்குப் பிறகு தொடங்கிய தரிசனத்தையடுத்து லட்சம் ரூபாய்களில் வசூலானது. தற்போது இத்தொகை கோடியை எட்டியுள்ளது.
நாள்தோறும் பக்தா்களின் வருகையும் 50 ஆயிரத்தை எட்டி வருவதால் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வசூலாகி வருகிறது. கடந்த மாதம் முழுவதும் வசூலான உண்டியல் காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.83.87 கோடி தேவஸ்தானத்துக்கு வருவாய் கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த நான் துரோகி: இபிஎஸ் மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு

முதலிடத்துக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு!

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கேரளம்: இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை என்ன? செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

