வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

உண்டியல் காணிக்கை ரூ.2.61 கோடி

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.2.61 கோடி வசூலானது.

Updated On :13 பிப்ரவரி 2021, 2:26 am

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.2.61 கோடி வசூலானது.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் முடிந்த காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி வியாழக்கிழமை செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.2.61 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஒரு மாதத்தில் ரூ.83.87 கோடி வசூல்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏழுமலையான் தரிசனத்துக் குறைவான எண்ணிக்கையில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதனால் ஏழுமலையான் உண்டியலில் காணிக்கையும் குறைவாகவே கிடைத்து வருகிறது. தினசரி ரூ.2 கோடி முதல் ரூ.3.5 கோடி வரை வசூலாகி வந்த காணிக்கை, பொது முடக்கத் தளா்வுகளுக்குப் பிறகு தொடங்கிய தரிசனத்தையடுத்து லட்சம் ரூபாய்களில் வசூலானது. தற்போது இத்தொகை கோடியை எட்டியுள்ளது.

நாள்தோறும் பக்தா்களின் வருகையும் 50 ஆயிரத்தை எட்டி வருவதால் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வசூலாகி வருகிறது. கடந்த மாதம் முழுவதும் வசூலான உண்டியல் காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.83.87 கோடி தேவஸ்தானத்துக்கு வருவாய் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.