தவெக தலைவர் விஜய் ஆதரவுடன் முதல்வராகி பணம் சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி முயன்றதாக செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தவெக பிரசாரத்தில் செங்கோட்டையன் பேசுகையில், "அதிமுகவிலிருந்து என்னை நீக்கியதுடன், என்னை துரோகி என்றும் இபிஎஸ் அழைக்கிறார். அதுமட்டுமின்றி, என் மீது இபிஎஸ் கொலை வெறியில் உள்ளார்.
இதற்குக் காரணம், தவெகவை அதிமுகவுடன் இணைத்து முதல்வராகி விடலாம் என்று இபிஎஸ் நினைத்தார். விஜய் ஆதரவுடன் ரூ. 5,000 கோடி சம்பாதிக்கவும் திட்டமிட்டார்.
ஆனால், விஜய் மட்டுமே முதல்வர் வேட்பாளர்; வேறு யாரும் இல்லை என நான் தெரிவித்ததால்தான்.
முதல்வர், பொதுச் செயலாளர் பதவியை விட்டுக்கொடுத்த எனக்கு கிடைத்த பரிசு, துரோகி. எனக்குப் பின் கட்சியில் சேர்ந்து பொதுச்செயலாளரானவர், கட்சிக்காக உழைத்தவர்களை நீக்கி வருகிறார்.
கட்சியைவிட்டு நீக்கப்பட்டபிறகு, கிளைச்செயலாளர் ஒருவர் வீட்டின் துக்க நிகழ்வுக்கு நான் சென்றதால், அவரையும் கட்சியைவிட்டு நீக்கி விட்டனர்.
10 முறை தோல்வியைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியால், திமுகவை வீழ்த்த முடியாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு, திமுகவை வீழ்த்த விஜய் ஒருவரால் மட்டுமே முடியும்" என்று தெரிவித்தார்.
Summary
TVK Leader Sengottaiyan Alleges Edappadi Palaniswami Planned to Make Money Through Vijay's Support
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக; இன்ஸ்டா ரீல்ஸ் மடைமாற்று அரசியலில் தவெக! - இபிஎஸ் குற்றச்சாட்டு

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கர்நாடக காங்கிரஸை எதிர்த்து பேச முடியுமா? தவெக அரசுக்கு இபிஎஸ் கேள்வி

முதல்வர் Vijay முன்னிலையில் அமைச்சராக பொறுப்பேற்றார் செங்கோட்டையன்! | TVK

இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




