தவெக தலைவர் விஜய் ஆதரவுடன் முதல்வராகி பணம் சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி முயன்றதாக செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தவெக பிரசாரத்தில் செங்கோட்டையன் பேசுகையில், "அதிமுகவிலிருந்து என்னை நீக்கியதுடன், என்னை துரோகி என்றும் இபிஎஸ் அழைக்கிறார். அதுமட்டுமின்றி, என் மீது இபிஎஸ் கொலை வெறியில் உள்ளார்.
இதற்குக் காரணம், தவெகவை அதிமுகவுடன் இணைத்து முதல்வராகி விடலாம் என்று இபிஎஸ் நினைத்தார். விஜய் ஆதரவுடன் ரூ. 5,000 கோடி சம்பாதிக்கவும் திட்டமிட்டார்.
ஆனால், விஜய் மட்டுமே முதல்வர் வேட்பாளர்; வேறு யாரும் இல்லை என நான் தெரிவித்ததால்தான்.
முதல்வர், பொதுச் செயலாளர் பதவியை விட்டுக்கொடுத்த எனக்கு கிடைத்த பரிசு, துரோகி. எனக்குப் பின் கட்சியில் சேர்ந்து பொதுச்செயலாளரானவர், கட்சிக்காக உழைத்தவர்களை நீக்கி வருகிறார்.
கட்சியைவிட்டு நீக்கப்பட்டபிறகு, கிளைச்செயலாளர் ஒருவர் வீட்டின் துக்க நிகழ்வுக்கு நான் சென்றதால், அவரையும் கட்சியைவிட்டு நீக்கி விட்டனர்.
10 முறை தோல்வியைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியால், திமுகவை வீழ்த்த முடியாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு, திமுகவை வீழ்த்த விஜய் ஒருவரால் மட்டுமே முடியும்" என்று தெரிவித்தார்.
Summary
TVK Leader Sengottaiyan Alleges Edappadi Palaniswami Planned to Make Money Through Vijay's Support
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் ஆதரவுடன் முதல்வராக இபிஎஸ் திட்டம்; பதவியை விட்டுக்கொடுத்தேன்! செங்கோட்டையன்
தில்லியின் அடிமை இபிஎஸ்: உதயநிதி கடும் தாக்கு
செங்கோட்டையன், ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு இபிஎஸ் துரோகம்: மு.க. ஸ்டாலின்

விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


