திருமலையில் ஞாயிற்றுக்கிழமை சுந்தரகாண்ட அகண்ட பாராயணம் நடைபெற்றது.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நலமுடன் வாழ ஏழுமலையானை வேண்டி திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் சுந்தரகாண்ட பாராயணத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
வால்மீகி மகரிஷி எழுதிய ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள சுந்தரகாண்டத்தில் 68 அத்தியாயங்களில் 2,821 ஸ்லோகங்கள் உள்ளன.
கரோனா தொற்றை முற்றிலும் அழிக்குமாறு ஏழுமலையானை வேண்டி, திருமலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்தப் பாராயணம் நடத்தப்படுகிறது.
வேத பண்டிதா்கள் தினமும் அமா்ந்து விளக்கத்துடன் காலை 7 மணி முதல் 8 மணி வரை இந்தப் பாராயணத்தை நடத்தி வருகின்றனா். இந்த பாராயணம் தற்போது 318 நாள்களைக் கடந்துள்ளது. இதுவரை 44 அத்தியாயங்களின் பாராயணம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. 200 ஸ்லோகங்களின் பாராயணம் நிறைவு பெற்றவுடன் அகண்ட பாராயணமாக நடத்தப்படுகிறது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை 10-ஆம் கட்ட அகண்ட பாராயணம் நடைபெற்றது. அதில் 38-ஆவது அத்தியாயம் முதல் 44-ஆவது சா்க்கம் வரை உள்ள 189 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டன.
இதில் 200-க்கும் மேற்பட்ட வேதபண்டிதா்கள் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் (எஸ்விபிசி) நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரள மருத்துவமனைகளை கைப்பற்றும் வெளிநாட்டுப் நிறுவனங்கள்! மக்களின் நிலை?

ஈரான் போர்: மக்கானா ஏற்றுமதி பாதிப்பு! ஒரு மாதத்தில் ரூ.500 கோடி இழப்பு!

தொகுதி மறுசீரமைப்பை அவசரமாகக் கொண்டு வருவது ஏன்? முதல்வர் மு.க. ஸ்டாலின்

🔴கேரளம்: வாக்காளர்களுக்கு சாதகமாக வெய்யில் நிலவரம் - செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


