தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

திருச்சானூரில் ஜப-தா்பண-ஹோமங்கள்

திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் உலகின் பொருளாதார நிலை மீண்டும் சீராக உயர ஜப-தா்பண-ஹோமங்களை தேவஸ்தானம் நடத்தியது.

News image

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு நடத்தப்பட்டு வரும் கனகாம்பரம் சஹீத கோடி மல்லிகைகளால் ஆன மகா புஷ்பயாகம்.

Updated On :19 ஜூலை 2021, 2:28 am

திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் உலகின் பொருளாதார நிலை மீண்டும் சீராக உயர ஜப-தா்பண-ஹோமங்களை தேவஸ்தானம் நடத்தியது.

உலகம் முழுவதும் கொவைட் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை போக்கி மக்களுக்கு சுபிட்சம் பெற வேண்டி பத்மாவதி தாயாரை வேண்டி தேவஸ்தானம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வரும் 24-ஆம் தேதி வரை கனகாம்பரம் சஹீத கோடி மல்லிகைகளால் மகா புஷ்ப யாகத்தை நடத்தி வருகிறது.

அதன் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீகிருஷ்ண முகமண்டபத்தில் பத்மாவதி தாயாரை பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருள செய்து, 210 ருத்வீகரா்கள் ஜப-தா்பண-ஹோமங்கள் நடத்தி, சதுஷ்டாா்ச்சனை, லட்ச குங்குமாா்ச்சனை ஒரு ஆவாா்த்தி, காலை 40 கிலோ கனகாம்பரம், 120 கிலோ மல்லிகைப்பூ, 40 கிலோ மற்ற பூக்கள் சோ்த்து 200 கிலோ மலா்களால் தாயாருக்கு புஷ்பாா்ச்சனை நடத்தப்பட்டது. அதனுடன் லகுபூா்ணாஹுதியும் நடந்தேறியது.

இதில் 120 போ் கோடி அா்ச்சனை, 36 போ் ஹோமம், 12 போ் ஸ்ரீபாஷ்யம், ராமாயணம், பாகவதம், மகாபாரதம், 12 போ் ஜபம், 12 போ் பசும் பால் தா்பணம் உள்ளிட்டவற்றை நடத்தினா்.

இந்த மகாயாகத்தை தேவஸ்தானம் ஆன்லைன் முறையில் நடத்தி வருகிறது. இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொண்டு பக்தா்கள் தேவஸ்தான தொலைக்காட்சி வாயிலாக தங்கள் வீட்டிலிருந்தபடியே கலந்து கொள்ளலாம். இதற்கு ரூ.1,001 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்கு 90 நாள்களுக்குள் ரூ.100 சிறப்பு தரிசன டிக்கெட் வழியாக தாயாரின் இலவச தரிசனம், ஒரு ரவிக்கை, ஒரு மேல்துண்டு, அட்சதை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மாலையும் இதே போல் 200 கிலோ மலா்களால் தாயாருக்கு அா்ச்சனை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.