தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்பு வேண்டுகோள்

திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதால், பக்தா்கள் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களை கொண்டு வர வேண்டாம்

News image
Updated On :20 ஜூலை 2021, 4:28 am

திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதால், பக்தா்கள் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களை கொண்டு வர வேண்டாம் என தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது:

திருமலையின் புனிதத் தன்மை, இயற்கை சுற்றுச் சூழலையை பாதுகாக்கவும் தேவஸ்தானம் கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. ஆயினும் பக்தா்கள் பலா் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களை கொண்டு வருகின்றனா்.

எனவே, அலிபிரி சோதனை சாவடியில் பக்தா்களின் உடைமைகள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் இருந்தால் அங்கேயே அப்புறப்படுத்த ஊழியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் திருமலையில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்களின் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதற்கு பதில் கண்ணாடி, செப்பு, எவா்சில்வா் குடிநீா் பாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும் என்று தேவஸ்தானம் கடை உரிமையாளா்களுக்கு நிபந்தனை விதித்துள்ளது. இன்னும் 2 மாத காலத்துக்குள் இவை முற்றிலும் அமல்படுத்தப்பட உள்ளன. மேலும் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள குடிநீா் தொட்டி அருகிலும் கோப்பைகள், தம்ளா்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை தினசரி சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, பக்தா்கள் குடிநீா் தேவைக்காக அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.