கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

பந்தல்குடி ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேக விழா

பந்தல்குடி ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழா, உலக நன்மைவேண்டி வழிபாடு நடைபெற்றது.

News image

பந்தல்குடி அருகே ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் சனிக்கிழமை நண்பகலில் நடைபெற்ற 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் பலவண்ண மலரலங்காரத்தில் ஸ்ரீசீரடி சாய்பாபா.

Updated On :28 ஜனவரி 2024, 9:37 am IST

அருப்புக்கோட்டை: பந்தல்குடி ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழா, உலக நன்மைவேண்டி வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை  பந்தல்குடி அருகே ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் சனிக்கிழமை நண்பகலில் 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு ஆகியன  நடைபெற்றன.

பந்தல்குடி அருகே செட்டிப்பட்டி அன்பு மாடல் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழா  சனிக்கிழமை நண்பகலில் நடைபெற்றது.

முன்னதாக காலை 8.30 மணிக்குத் தொடங்கிய சிறப்பு வேள்வியில், ஸ்ரீவிக்னேஸ்வர பூஜையில் தொடங்கி லஷ்மி கணபதி யாகம், 108 சங்கு தீர்த்த அபிஷேகம், பூர்ணாஹூதி உள்ளிட்ட பல்வேறு வேள்வி பூஜைகளும், நிறைவாக குடமுழுக்கும், ஸ்ரீசீரடி சாய்பாபா உற்சவர் மற்றும் விக்கிரக அபிஷேகமும் நடைபெற்றன.

அதையடுத்து பாபா பக்திப்பாடல் இசையுடன் தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன. உலக நன்மை வேண்டியும், மக்களை நோய்த்தொற்றிலிருந்து காக்கவும், பொருளாதாரம் ஓங்கிடவும் 108 நாமாவளி அர்ச்சனையும், தியானமும் நடைபெற்றன.

நடன ஆசிரியர் ஜெயக்குமார் மற்றும் அவரது மாணவி ஆகியோர் பாரம்பரிய நடனம் ஆடி விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். 

விழா ஏற்பாடுகளை கோயிலின் தலைமை  நிர்வாகியும் 5 ஸ்டார் நீச்சல் குளம் உரிமையாளருமான மனிதத்தேனீ டாக்டர் வி.சுந்தரமூர்த்தி மற்றும் சுப்புலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.