ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை செப்டம்பர் 6ஆம் தேதி திறக்கப்படுகிறது.
செப்.8ஆம் தேதி நடைபெறும் திருவோண தினத்தில் சிறப்புப் பூஜை தரிசனத்துக்காக ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது.
ஓணம் பண்டிகை சிறப்புப் பூஜைக்குப் பிறகு 10ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
பின்னர், புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது.