சதுரகிரி கோயிலுக்குச் செல்ல நாளை முதல் செப்.26 வரை அனுமதி! 

புரட்டாசி மாத அமாவாசையையொட்டி சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல செப். 23 முதல் 26ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சதுரகிரி கோயிலுக்குச் செல்ல நாளை முதல் செப்.26 வரை அனுமதி! 
Published on
Updated on
1 min read

புரட்டாசி மாத அமாவாசையையொட்டி சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல செப். 23 முதல் 26ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வரும் வெள்ளிக்கிழமை (செப்.23) பிரதோஷமும், ஞாயிற்றுக்கிழமை (செப்.25) மகாளய அமாவாசை வழிபாடும் நடைபெற உள்ளன.

இதையொட்டி செப்.23 முதல் 26 ஆம் தேதி வரை 4 நாள்கள் மலைக் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதில் காய்ச்சல் சளி, இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com