சூரிய கிரகணத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலுக்குச் செல்லும் முருக பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோயில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் பாலமுருகனை தரிசனம் செய்து வந்தாலும், செவ்வாய்க்கிழமைகளில் முருக பக்தர்கள் பன்மடங்காக வந்து முருகப்பெருமானை தரிசித்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் வரும் 25-ம் தேதி செவ்வாய்க்கிழமை சூரிய கிரகணம் நிகழ உள்ளதால், முக்கிய கோயில்கள் நடை சாத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் சிறுவாபுரி பாலாமுருகன் கோயிலில் கிரகணத்தை முன்னிட்டு அன்றைய தினம் மதியம் 12 மணி முதல் மாலை 7 மணி வரை கோயில் நடை மூடப்படுகிறது.
சாந்தி பூஜைகள் செய்யப்பட்ட பின் இரவு 7 மணிக்கு மேல் தரிசனத்திற்கு கோயில் நடை திறக்கப்படும் என்று கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


