சிறுவாபுரி கோயிலுக்குச் செல்லும் முருக பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சூரிய கிரகணத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலுக்குச் செல்லும் முருக பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சிறுவாபுரி முருகன்
சிறுவாபுரி முருகன்
Published on
Updated on
1 min read

சூரிய கிரகணத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலுக்குச் செல்லும் முருக பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோயில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் பாலமுருகனை தரிசனம் செய்து வந்தாலும், செவ்வாய்க்கிழமைகளில் முருக பக்தர்கள் பன்மடங்காக வந்து முருகப்பெருமானை தரிசித்துச் செல்வது வழக்கம். 

இந்நிலையில் வரும் 25-ம் தேதி செவ்வாய்க்கிழமை சூரிய கிரகணம் நிகழ உள்ளதால், முக்கிய கோயில்கள் நடை சாத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் சிறுவாபுரி பாலாமுருகன் கோயிலில் கிரகணத்தை முன்னிட்டு அன்றைய தினம் மதியம் 12 மணி முதல் மாலை 7 மணி வரை கோயில் நடை மூடப்படுகிறது. 

சாந்தி பூஜைகள் செய்யப்பட்ட பின் இரவு 7 மணிக்கு மேல் தரிசனத்திற்கு கோயில் நடை திறக்கப்படும் என்று கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com