திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை தேரோட்டம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் வியாழக்கிழமை குவிந்த பக்தர்கள்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் வியாழக்கிழமை குவிந்த பக்தர்கள்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை(பிப்.23) தேரோட்டம் நடைபெற உள்ளது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.

மாசித்திருவிழா புதன்கிழமை(பிப்.14) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்தாம் நாள் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com