நாமக்கல்: ஆங்கில புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 7 டன் மலர்களால் திங்கள்கிழமை அதிகாலை அபிசேகம் நடைபெற்றது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, 18 அடி உயரத்தில், நின்றகோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் சுவாமியை தரிசிக்க வருகின்றனர்.

தற்போது, சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. 2024 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, ஏழு டன் எடை கொண்ட நாமக்கல் ஆஞ்சனேயருக்கு மல்லிகை, முல்லை, சம்பங்கி, மரிக்கொழுந்து, ரோஜா, வெள்ளை, சிகப்பு, மஞ்சள் சாமந்தி, துளசி உள்ளிட்ட பல்வேறு நறுமண மலர்களால் சுவாமிக்கு திங்கள்கிழமை காலை 6 மணி அளவில் சிறப்பு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிக்க.. காத்திரமான மார்க்ஸியக் கலைச்சொற்கள் - நூல் அறிமுகம் I விமர்சனம்

அதன் பிறகு சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டு சென்றனர். அபிசேகத்துக்குப் பயன்படுத்திய மலர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெளிநாட்டில் தீவிர சண்டைப் பயிற்சியில் ரஷ்மிகா..! ஒரு நாளைக்கு 8 மணி நேர உழைப்பு!

தலைவா்கள் சூறாவளி பிரசாரம்: தமிழகத்தில் சூடுபிடித்துள்ள தோ்தல் களம்!

பெண்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்; அவர்களே எங்கள் வாக்கு வங்கி: அமைச்சர் ரகுபதி
பெரம்பூர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவெக தலைவர் விஜய் பெயர் எங்கே இடம்பெறும்?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


