25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

வெளிநாட்டில் தீவிர சண்டைப் பயிற்சியில் ரஷ்மிகா..! ஒரு நாளைக்கு 8 மணி நேர உழைப்பு!

நடிகை ரஷ்மிகா மந்தனாவின் தீவிரமான பயிற்சி குறித்து...

Rashmika undergoes intense combat training abroad.

வெளிநாட்டில் தீவிர சண்டைப் பயிற்சியில் ரஷ்மிகா. - படம்: இன்ஸ்டா / ரவீந்திர புல்லே.

Published On :18 ஏப்ரல் 2026, 11:32 am IST

நடிகை ரஷ்மிகா மந்தனா ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன.

கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகை ரஷ்மிகா முதலில் கன்னட படத்தில் 2016ல் அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்திய நடிகையாக மாறியுள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகிவிட்டார்.

ரவீந்திர புல்லே இயக்கும் மைசா படத்தில் போர் வீராங்கனை போல அதிராடியான கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதன் கிளிம்ஸ் விடியோ வெளியாகி எதிர்பார்பை எகிற வைத்திருக்கிறது.

இந்தப் படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்காக, ரஷ்மிகா பேங்காக்கில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன.

ராஷ்மிகாவின் புகைப்படங்களை இயக்குநர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, “போர் என்பது தழும்புகளில் எழுதப்படுகிறது. அவள்தான் ஆயுதம்” எனக் கூறியுள்ளார்.

Summary

Rashmika Mandanna is currently undergoing rigorous 8 hour a-day Hand-to-hand combat training in Bangkok.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.