ரத்தினகிரி முருகன் கோயிலில் காவடி சுமந்து பக்தர்கள் வழிபாடு!

சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பம் குடும்பமாகக் காவடியைத் தோளில் சுமந்தபடி பிரார்த்தனை.
ரத்தனகிரி முருகன்
ரத்தனகிரி முருகன்
Published on
Updated on
1 min read

ராணிப்பேட்டை, ரத்தினகிரி அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தில் ஆடிக் கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான ரத்தினகிரி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பம் குடும்பமாகக் காவடியைத் தோளில் சுமந்தபடி பம்பை மேளங்கள் முழங்கப் பக்தி பாடல்களைப் பாடி நடனம் ஆடி நடைப்பயணமாக ஆலயத்திற்கு வருகை தந்து பாலமுருகனைத் தரிசனம் செய்தனர். தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி வழிபாட்டில் ஈடுபட்டு அருளாசி பெற்றனர்.

பக்தி பரவசத்தில் பக்தர்கள்
பக்தி பரவசத்தில் பக்தர்கள்

முன்னதாக அருள்மிகு பாலமுருகன் சாமிக்கு பாலமுருகன் அடிமை சாமிகளின் மூலம் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு உள் மாவட்ட மட்டுமின்றி பிற மாவட்டங்களிலிருந்தும் அதிகாலை முதல் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டினை மேற்கொண்டனர்.

காவடி சுமந்து பெண்கள் வழிபாடு
காவடி சுமந்து பெண்கள் வழிபாடு

பக்தர்களின் நலன் கருதி மருத்துவக் குழுவினர் தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என ஏராளமானோர் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் உள்ளிட்டவைகள் கோயில் நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாக வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com