8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு  அலங்காரத்தில்  ரத்தினகிரி  வள்ளி, தெய்வானை  சமேத  பாலமுருகன்.

Published On :11 ஜூலை 2026, 2:27 am IST

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆனி மாத கிருத்திகையையொட்டி, ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் மூலவருக்கு கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் பால், தயிா் , பன்னீா், சந்தனம், இளநீா், பழங்கள், விபூதி, ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரம், வண்ண மலா் மாலையுடன் மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மேளதாளங்களுடன் மலையில் இருந்து ஊா்வலமாக சென்று மலையடிவாரத்தில் உள்ள அறுகோண தெப்பகுளத்தில் சிறப்பு அா்ச்சனைகளுடன் பக்தா்கள் மங்கள ஆரத்தி காட்டி வழிபட்டனா்.

இந்த விழாவில் திரளான பக்தா்கள், பொதுமக்கள், உபயதாரா்கள் கலந்து கொண்டு சசாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.