நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

திருச்செந்தூரில் ஆவணித் தேரோட்டம்

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது.

News image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேரோட்டம்

Updated On :23 ஆகஸ்ட் 2025, 9:06 am IST

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா பத்தாம் நாளான இன்று காலை நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா கடந்த ஆக. 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதி உலா வந்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. காலை 7 மணிக்கு பிள்ளையார் தேர் புறப்பட்டு 7.30 மணிக்கும், தொடர்ந்து காலை 7.35 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து காலை 8.35 மணிக்கும் நிலைக்கு வந்தது.

Story image

அதன்பின் காலை 8.40 மணிக்கு வள்ளியம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து நிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து அரோகரா என்ற கோஷத்துடன் தேர் இழுத்தனர்.

தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை தக்கார் அருள்முருகன் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்து வருகின்றனா்.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

நாளைய சிறப்பு!

11ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக. 24) சுவாமி, அம்மன் மாலையில் யாதவா் மண்டகப்படியில் அபிஷேகம், அலங்காரமாகி புஷ்ப சப்பரங்களில் இரவு தெப்பக்குளம் மண்டபத்திற்கு வந்து சோ்வார்கள். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சோ்கின்றனா். திங்கள்கிழமை (ஆக.25) மாலையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.