பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

மாகி பௌர்ணமி: ஹரித்துவாரில் திரளானோர் புனித நீராடல்!

ஹரித்துவாரில் மாகி பௌர்ணமி புனித நீராடல் பற்றி..

News image

கங்கை நதி

Updated On :12 பிப்ரவரி 2025, 1:38 pm IST

மாகி பௌர்ணமியை முன்னிட்டு ஹிரித்துவாரில் உள்ள கங்கை நதியில் திரளான பக்தர்கள் புனித நீராடி பிரார்த்தனை செய்தனர்.

இதற்கிடையில், மகா கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் ஒரு மாத காலத்துக்கு தங்கியிருந்து மேற்கொள்ளும் கல்பவாச விரத வழிபாடு மாகி பௌர்ணமியுடன் நிறைவடைகிறது. மாநில அரசு தகவலின்படி, நடப்பு கும்பமேளாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கல்பவாச விரத வழிபாடு மேற்கொண்டனர்.

கும்பமேளாவில் மாகி பௌர்ணமியன்று புனித நீராடுவது சிறப்புக்குரியதாகும். இதையொட்டி கடந்த சில நாள்களாக பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் பிரயாக்ராஜை முற்றுகையிட்டனர். பிரயாக்ராஜ் நோக்கிய பல தேசிய நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பல கி.மீ-க்கு அணிவகுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிறகு பக்தர் ஒருவர் கூறுகையில், இன்று அதிகாலை 3 மணிக்கு புனித நீராடினேன். மௌனி அமாவாசையை விட இன்று கூட்டம் குறைவாகவே உள்ளது. இங்கு ஏற்பாடுகள் நன்றாக உள்ளன என்றார்.

மேலும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மற்றும் துறவிகள் மீது மலர் இதழ்கள் பொழிந்தன.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இதுவரை 48.83 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

மேளா மைதானத்திற்கு வருகை தரும் மொத்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 38.83 மில்லியனை எட்டியுள்ளது, அதே நேரத்தில் அப்பகுதியில் தங்கியுள்ள கல்பவாசிகள் 10 மில்லியனைத் தாண்டியுள்ளது.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அலுவலகத்திலிருந்து சங்கமத்தில் நடைபெறும் மாகி பௌர்ணமி புனித நீராடலைக் கண்காணித்தார். இந்த மங்களகரமான நிகழ்வில் எக்ஸ் தளத்தில் மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த பிரமாண்டமான நிகழ்வு பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி அன்று நிறைவடைகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.