தை அமாவாசையையொட்டி, வேதாரண்யம், கோடியக்கரை கடலில் இன்று காலை முதல் புனித நீராடல் செய்த மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் தை, ஆடி அமாவாசை, அர்த்ததோயம், மகோதயம், மாசி மகம் ஆகிய நாள்களில் புனித நீராடல் செய்யும் மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

கோடியக்கரை கடலில் மக்கள் புனித நீராடல்
இந்த நிலையில், தை அமாவாசை நாளான புதன்கிழமையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான மக்கள் அதிகாலை தொடங்கி புனித நீராடல் செய்தனர்.
கோடியக்கரை முழுக்குத்துறையில் நீராடியவர்கள், தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் (நீர்சடங்கு) செய்தனர். பின்னர் அங்குள்ள சித்தர் கோயில், ராமர் பாதம் உள்ளிட்ட இடங்களில் வழிபட்டனர்.
அதேபோல், வேதாரண்யம் சன்னதி கடற்பரப்பில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மணிக்கர்ணிகையில் இறைவனை வழிபட்டனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்
Summary
Kodiyakarai: On the occasion of Thai Amavasya, thousands of people performed ancestral rituals
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிப்காட் அணுகு சாலை அளவீட்டுக்கு விவசாயிகள் எதிர்ப்பு! விஷம் குடித்து, தீக்குளிக்க முயன்ற தம்பதி!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா ஆலோசனைக் கூட்டம்

அமாவாசை: சதுரகிரியில் பக்தா்கள் வழிபாடு

பெருமாள் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government




