விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

தை அமாவாசை! கோடியக்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

வேதாரண்யம், கோடியக்கரை கடலில் இன்று காலை முதல் புனித நீராடல் செய்த மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

News image

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்

Updated On :18 ஜனவரி 2026, 12:28 pm IST

தை அமாவாசையையொட்டி, வேதாரண்யம், கோடியக்கரை கடலில் இன்று காலை முதல் புனித நீராடல் செய்த மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் தை, ஆடி அமாவாசை, அர்த்ததோயம், மகோதயம், மாசி மகம் ஆகிய நாள்களில் புனித நீராடல் செய்யும் மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

கோடியக்கரை  கடலில் மக்கள் புனித நீராடல்

கோடியக்கரை கடலில் மக்கள் புனித நீராடல்

இந்த நிலையில், தை அமாவாசை நாளான புதன்கிழமையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான மக்கள் அதிகாலை தொடங்கி புனித நீராடல் செய்தனர்.

கோடியக்கரை முழுக்குத்துறையில் நீராடியவர்கள், தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் (நீர்சடங்கு) செய்தனர். பின்னர் அங்குள்ள சித்தர் கோயில், ராமர் பாதம் உள்ளிட்ட இடங்களில் வழிபட்டனர்.

அதேபோல், வேதாரண்யம் சன்னதி கடற்பரப்பில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மணிக்கர்ணிகையில் இறைவனை வழிபட்டனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த  மக்கள்

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்

Summary

Kodiyakarai: On the occasion of Thai Amavasya, thousands of people performed ancestral rituals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.