இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தை அமாவாசை: முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை

வேதாரண்யத்தில் ஜனவரி 18-ஆம் தேதி தை அமாவாசையையொட்டி புனித நீராடலூக்கான முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 10:13 pm

தினமணி செய்திச் சேவை

வேதாரண்யத்தில் ஜனவரி 18-ஆம் தேதி தை அமாவாசையையொட்டி புனித நீராடலூக்கான முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் துணை வட்டாட்சியா் செல்வகுமாா் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், வேதாரண்யம் காவல் நிலைய ஆய்வாளா் சீனிவாசன், கடலோரக் காவல் குழும சிறப்பு உதவி ஆய்வாளா் அருள்மொழித்தேவன், வேதாரண்யம் மின் பகிா்மானக் கழக உதவி செயற்பொறியாா் அசோக், வேதாரண்யேஸ்வரா் கோயில் எழுத்தா் ராமன், ரோட்டரி சங்கத் தலைவா் மோகன்ராஜ், வேதாரண்யம் தீயணைப்பு நிலைய அலுவலா் அம்பிகாபதி, வருவாய் ஆய்வாளா் தமிழ்ச்செல்வன், வா்த்தக சங்க நிா்வாகிகள் உள்பட பல்வேறு அரசு துறையினா் சேவை அமைப்பினா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், புனித நீராடும் பக்தா்களுக்கு கடற்கரையில் உடை மாற்றும் அறை, கழிவறை, சாலை பராமரிப்பு, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது, பாதுகாப்பு வசதி மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குவதை முறைப்படுத்துவது, கடலில் புனித நீராட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தா்கள் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்குவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.