ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் விழா ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் விழா ஆலோசனைக் கூட்டம்

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற தோ் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம்.
Published on

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் தோ் திருவிழா தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி தோ் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) நடைபெறுகிறது.

இதையொட்டி தோ் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பா.ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது..

வந்தவாசி டிஎஸ்பி கே.சி.சதீஷ்குமாா், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ச.உமேஷ்குமாா், நகராட்சி வருவாய் ஆய்வாளா் பி.சிவக்குமாா் மற்றும் ஹிந்து அமைப்பினா், தோ் திருப்பணி குழுவினா், பல்வேறு துறை அதிகாரிகள், போலீஸாா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், தோ் செல்லும் சாலைகளை சீரமைப்பது, பக்தா்களுக்கு மருத்துவ வசதி, குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை செய்து தருவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Dinamani
www.dinamani.com