திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசிப் பெருவிழா மார்ச் 03 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசிப் பெருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு மாசிப் பெருவிழா மார்ச் 3 முதல் மார்ச் 14 வரை நடைபெறுகிறது.
விழா நாள்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதி உலா வருவார்கள். திருவிழாவின் பத்தான் நாள் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 12 புதன்கிழமை காலை நடைபெறுகிறது.
முதலில் பிள்ளையார் தேரும், சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வருவார்கள். அதன்பின் தெய்வானை அம்மன் தேரில் எழுந்தருளி வீதிஉலா நடைபெறும். தேரோட்டத்தில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.
விழாவின் பதினொன்றாம் நாளான மார்ச் 13ல் இரவு 10 மணியளவில் தெப்ப உற்சவம் நடைபெறும் அபிஷேகம் அலங்காரமாகி சுவாமி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றிவருவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வல்லக்கோட்டை கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!

சந்தானராமா் கோயிலில் ஸ்ரீராமநவமி பெருவிழா கொடியேற்றம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்: மாா்ச் 29-இல் ஆழித்தேரோட்டம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

