மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

தஞ்சாவூரில் 600 ஆண்டுகள் பழமையான பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா!

தஞ்சாவூரில் நடைபெற்ற 600 ஆண்டுகள் பழமையான பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா குறித்து...

News image

பழமையான பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா!

படம்: DNS

Updated On :31 மார்ச் 2026, 7:50 am

இணையதளச் செய்திப் பிரிவு

தஞ்சாவூரில் 600 ஆண்டுகள் பழமையான பச்சைக்காளி - பவளக்காளி வீதியுலா இன்று(மார்ச் 31) நடைபெற்றது.

வீதிகளில் உலா வந்த பச்சைக்காளி பவளக்காளியை ஏராளமான பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து வழிபட்டனர்.

தஞ்சாவூரில் 600 ஆண்டுகள் பழமையான பச்சைக்காளி - பவளக்காளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த விழா, இந்தாண்டு கடந்த 9 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான காளி புறப்பாடு, இன்று அதிகாலை நடைபெற்றது. வெவ்வேறு ஆலயங்களில் இருந்து பச்சைக்காளி - பவளக்காளி புறப்பாடாகி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள்.

வீதிகளில் உலா வந்த காளியைப் பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான பச்சைக்காளி - பவளக்காளி உறவாடும் நிகழ்ச்சி நாளை(மார்ச் 31) நள்ளிரவு நடைபெறுகிறது.

Summary

The street procession of the 600-year-old Pachaikali and Pavalakkali took place today (March 31) in Thanjavur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.