சிதம்பரத்தில் சுப்ரமணியர் தேரோட்டம்!
பங்குனி உத்திர உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற சுப்ரமணியர் தேரோட்டம்.

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுப்பிரமணியர் தேரோட்டம்.
படம்: டிஎன்எஸ்

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுப்பிரமணியர் தேரோட்டம்.
படம்: டிஎன்எஸ்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள பாண்டியநாயகம் கோயில் பங்குனி உத்திர உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ சுப்ரமணியர் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் வடக்கு கோபுரம் அருகே உள்ள பாண்டியகம் கோயில் (சுப்ரமணியர் கோயில்) உற்சவம் கடந்த மார்ச் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் வருடாந்திர பங்குனி உத்திர உற்சவம் தொடங்கியது.
தொடர்ந்து, தினந்தோறும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை (மார்ச்.31-ம் தேதி) ஸ்ரீ சுப்ரமணியர் தேரோட்டம் நடைபெற்றது.
கீழவீதி தேரடி நிலையிலிருந்து தேர் புறப்பட்டு நான்கு வீதிகள் வலம் வந்து, தேர் நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று முருகா, முருகா என முழக்கமிட்டு வடம் பிடித்து தேரை இழுத்து வழிபட்டனர்.
பின்னர், பங்குனி உத்திர உற்சவத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது. நாளை ஏப்.1-ம் தேதி புதன்கிழமை காலை ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், பின்னர் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...