கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

சுவாமிமலை முருகன் கோயிலில் தேரோட்டம்!

சுவாமிமலையில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.

News image

சுவாமிமலை - video crop

Updated On :2 மே 2026, 10:15 am

அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடு கோயிலாக விளங்கும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக உள்ளது. இங்கு சித்திரைத் திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.

தேரில் வள்ளி - தெய்வானையுடன் ஆறுமுகசாமி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தேரினை முருக - முருக, அரோகரா அரோகரா என்று முழக்கம் இட்டவாறு தேரின் வடத்தைப் பிடித்து இழுத்து மகிழ்ந்தனர்.

Summary

The Chithirai Grand Festival's highlight—the Chariot Procession—took place at the Swamimalai Swaminatha Swamy Temple, which stands as the fourth of the six sacred abodes (Arupadai Veedu).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.