
தேரோட்டம்
DPS

தேரோட்டம்
DPS
நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
நாகேஸ்வரர் - பிரகன்நாயகி திருத்தேரில் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நாககேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர பெருவிழா 13 நாள்களுக்குச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோலவே, இவ்வாண்டும் இவ்விழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
உற்சவர் நாகேஸ்வரசுவாமிக்கும், பிரகன்நாயகியம்பிகை, திருத்தேரில் எழுந்தருளத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...