தினமணி நடத்திய நவராத்திரி கொலு போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நவராத்திரி கொலு போட்டியில், தினமணி வாசகர்கள் தங்கள் வீடுகளில் அலங்கரித்து வைத்திருந்த நவராத்திரி கொலு புகைப்படங்கள் / விடியோக்களை அனுப்பியிருந்தனர். அவை தினமணி.காம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.
இந்தப் போட்டியில் பங்கேற்றவர்களில், மிகச் சிறப்பாக அலங்கரித்து வைத்திருந்த நவராத்திரி கொலுவை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்து, அவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.
முதல் பரிசு - பவித்ரா நந்தகுமார்,
ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்;
இரண்டாம் பரிசு - சாம்பசிவம்
குரோம்பேட்டை, சென்னை;
மூன்றாம் பரிசு - சத்திய நாராயணமூர்த்தி
ஷெனாய் நகர், சென்னை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.