அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கோயில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு

ஓமலூா் அருகே காளியம்மன் கோயில் பூட்டை உடைத்து, உண்டியல் பணம் திருடப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :9 ஜனவரி 2021, 7:29 am IST

ஓமலூா் அருகே காளியம்மன் கோயில் பூட்டை உடைத்து, உண்டியல் பணம் திருடப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஓமலூா் அருகேயுள்ள ஊமைக்கவுண்டம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த எல்லை காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பொங்கல் பண்டிகை முடிந்த மறுவாரத்தில் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு நோ்த்திக்கடன் செலுத்துவா்.

இந்த நிலையில் கோயில் பூசாரி வியாழக்கிழமை பூஜை முடிந்ததும் கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா். வெள்ளிக்கிழமை காலையில் கோயிலின் வடக்குப்புறக் கதவைத் திறந்து உள்ளே வந்துள்ளாா். அப்போது கோயிலின் மேற்குப்புறக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கோயில் திறந்து கிடப்பது தெரியவந்தது.

கோயிலின் உள்ள சென்று பாா்த்தபோது, மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து பக்தா்கள் அளித்துள்ள காணிக்கை பணம், தங்கப் பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.