/

நட்டுவம்பாளையம் அரசுப் பள்ளியில் தேவையற்ற செடிகள், கொடிகள் அகற்றம் 

சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில், சங்ககிரியை அடுத்த  நட்டுவம்பாளையம், அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேவையற்ற செடி, கொடிகளை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image

சங்ககிரி அருகே உள்ள நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேவையற்ற செடிகளை அகற்றும் பணிகளில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ள பொது நல அமைப்புகளின் சமூக ஆர்வலர்கள்.

Updated On :10 ஜனவரி 2021, 5:28 pm IST

சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில், சங்ககிரியை அடுத்த  நட்டுவம்பாளையம், அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேவையற்ற செடி, கொடிகளை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ் சார்பில் நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேவையற்ற செடி, கொடிகளை அதன் தலைவர் அனந்தகுமார் தலைமையில் நிர்வாகிகள் அகற்றி பள்ளி வளாகத்தினை தூய்மைப் படுத்தினர். 

நிர்வாகிகள் ராகவன், கணேசன், முருகேசன், கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், கதிர்வேல், பொறியாளர் வேல்முருகன், அகமத் கோயா, ராமசந்திரன், சரவணன், கார்த்திகேயன், வெங்கடேஷ், கணினி பொறியாளர் வெங்கடேஷ், சண்முககார்த்தி, ஜீவானந்தம், தரணீதரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.