தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

சங்ககிரி கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை

சங்ககிரி, மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

News image

செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் உற்சவமூா்த்திகளுக்கு பிரதோஷத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

Updated On :10 ஜனவரி 2021, 8:34 pm

சங்ககிரி, மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிக்கு பிரதோஷத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் உற்சவ மூா்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சுவாமியை வணங்கிச் சென்றனா். இதேபோல சங்ககிரியை அடுத்துள்ள பூத்தலாக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா் கோயிலில் பூத்தாழீஸ்வரா், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் பிரதோஷ விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.அதனையடுத்து நந்தீஸ்வரருக்கு பால், தயிா், இளநீா், திருமஞ்சனம், சந்தனம், அரிசிமாவு, குங்குமம், திருநீறு, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா் நந்திக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, மலா்கள், அருகம்புற்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து கோயிலுக்குள் உற்சவமூா்த்தி வலம் நடைபெற்றது. பக்தா்கள் பலரும், தேவாரம் ,திருவாசங்களிலிருந்து பாடல்களை பாடியபடி இருந்தனா். இதில் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா்.

இதேபோல செந்தாரப்பட்டி தாழைபுரீஸ்வரா் கோயில், வீரகனூா்,கெங்கவல்லி,கூடமலை ஆகிய ஊா்களிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.