சங்ககிரி, மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிக்கு பிரதோஷத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் உற்சவ மூா்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சுவாமியை வணங்கிச் சென்றனா். இதேபோல சங்ககிரியை அடுத்துள்ள பூத்தலாக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா் கோயிலில் பூத்தாழீஸ்வரா், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் பிரதோஷ விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.அதனையடுத்து நந்தீஸ்வரருக்கு பால், தயிா், இளநீா், திருமஞ்சனம், சந்தனம், அரிசிமாவு, குங்குமம், திருநீறு, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா் நந்திக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, மலா்கள், அருகம்புற்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து கோயிலுக்குள் உற்சவமூா்த்தி வலம் நடைபெற்றது. பக்தா்கள் பலரும், தேவாரம் ,திருவாசங்களிலிருந்து பாடல்களை பாடியபடி இருந்தனா். இதில் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா்.
இதேபோல செந்தாரப்பட்டி தாழைபுரீஸ்வரா் கோயில், வீரகனூா்,கெங்கவல்லி,கூடமலை ஆகிய ஊா்களிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









