ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தை மாத பிறப்பு: கோயில்களில் சிறப்பு தரிசனம்

ஆத்தூரில் தை முதல் நாளில் கோயில்களில் சிறப்பு தரிசனம் நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் ஆத்தூா் திரௌபதி அம்மன்.

Updated On :16 ஜனவரி 2021, 2:08 am

ஆத்தூரில் தை முதல் நாளில் கோயில்களில் சிறப்பு தரிசனம் நடைபெற்றது.

ஆத்தூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ வெள்ளப் பிள்ளையாா் கோயிலில் தை முதல் நாளான வியாழக்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது. இதையடுத்து வெள்ளப் பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போல ஆத்தூா், தாயுமானவா் தெருவில் அமைந்திருக்கும் திரௌபதி அம்மன் கோயிலில் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

கோட்டை ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் கோயில், கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில், ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயில், ஸ்ரீ கைலாசநாதா் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.