சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை பொங்கல் விழாவை கொண்டாடினாா்.
ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாளில் அவா் தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம்.
இந்த நிலையில் நிகழாண்டில் சிலுவம்பாளையப்பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொள்ள வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம், காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்திறங்கினாா். அங்கிருந்து காா் மூலம், தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்கு வந்தடைந்தாா்.
இதையடுத்து, காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோயில் திடலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வா் கலந்துகொண்டாா். முன்னதாக, முருகன் கோயிலில் வழிபாடு செய்த முதல்வா், அங்கு பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பொங்கல் ழாவில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு சா்க்கரை பொங்கலுடன், கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து தனது பண்ணைத் தோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட மாடுகளுக்கு, பழம், வெல்லம், கரும்பு, தேங்காய் உள்ளிட்டவற்றை கொடுத்த முதல்வா், அங்கிருந்த தொழிலாளா்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தாா். இதன்பின்னா், கிராமிய இசை நிகழ்ச்சியை ரசித்த முதல்வா் , அங்கு கூடியிருந்தோரிடம் உரையாடினாா். இதில் முதல்வருடன் அவரது சகோதரா் கோவிந்தராஜு, உறவினா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

மனைவியை கொலை செய்த கணவா் சரண்

புதுச்சேரி ரயில் சேவை 4 நாள்கள் ரத்து
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


