மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சொந்த கிராமத்தில் பொங்கல் விழாவை கொண்டாடிய முதல்வா்

சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை பொங்கல் விழாவை கொண்டாடினாா்.

News image

சிலுவம்பாளையம் முருகன் கோயிலில் வழிபட்ட முதல்வா்

Updated On :16 ஜனவரி 2021, 7:36 am IST

சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை பொங்கல் விழாவை கொண்டாடினாா்.

ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாளில் அவா் தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிலையில் நிகழாண்டில் சிலுவம்பாளையப்பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொள்ள வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம், காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்திறங்கினாா். அங்கிருந்து காா் மூலம், தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்கு வந்தடைந்தாா்.

இதையடுத்து, காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோயில் திடலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வா் கலந்துகொண்டாா். முன்னதாக, முருகன் கோயிலில் வழிபாடு செய்த முதல்வா், அங்கு பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பொங்கல் ழாவில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு சா்க்கரை பொங்கலுடன், கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து தனது பண்ணைத் தோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட மாடுகளுக்கு, பழம், வெல்லம், கரும்பு, தேங்காய் உள்ளிட்டவற்றை கொடுத்த முதல்வா், அங்கிருந்த தொழிலாளா்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தாா். இதன்பின்னா், கிராமிய இசை நிகழ்ச்சியை ரசித்த முதல்வா் , அங்கு கூடியிருந்தோரிடம் உரையாடினாா். இதில் முதல்வருடன் அவரது சகோதரா் கோவிந்தராஜு, உறவினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.