கருக்கலைப்பு (Abortion) என்பது முளையம் (embryo) அல்லது முதிர்கரு (fetus) கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பைக்கு வெளியே இருக்கும்போது உயிர்வாழக் கூடிய தன்மையை அடைவதற்கு முன்னர், அதனை கருப்பையிலிருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும்.
மற்ற எந்த உயிரினங்களும் செய்யாத ஒன்றை மனிதன் செய்வதே கருக்கலைப்பு, கேட்டால் ஆறறிவு என்பான்.
இவ்வாறான வேலையில், கற்பழிப்பு மூலம் உருவானது மற்றும் இயல்புக்கு மாறான வளர்ச்சி கொண்ட கரு போன்றவை 20 வாரத்துக்கும் மேற்பட்ட வளர்ச்சி கொண்டிருந்தாலும் அவற்றை கலைக்க அனுமதி அளிப்பது தொடர்பாக மேற்படி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கர்நாடகாவைச் சேர்ந்த அனுஷா ரவீந்திரா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இத்தகைய விதிவிலக்கான வழக்குகளில் 20 வாரத்துக்கு மேற்பட்ட வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக நிரந்தர வழிமுறையை உருவாக்குவதற்கான குழு ஒன்றையும் அமைக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து மேற்படி நிரந்தர வழிமுறைகளை உருவாக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் அறிவுறுத்தி உள்ளது.
எனினும் இந்த விவகாரத்தில் இந்திய கருக்கலைப்பு சட்டம் 1971 ல் திருத்தம் மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இந்திய கருக்கலைப்பு சட்டம் 1971 என்ன சொல்கிறது எனப் பார்ப்போம்
மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971
(Medical Termination of Pregnancy Act,1971)
சில வகை கர்ப்பங்களை பதிவு பெற்ற மருத்துவர் கலைப்பதற்காகவும் இதன் சம்மந்தமாகவும் உடன் நிகழ்வாகவும் எழும் சங்கதிகளுக்கு வரையறை செய்யப்பட்ட சட்டம்.
இந்தியா குடியரசானதன் பின் 22 ஆம் ஆண்டு இச்சட்டம் இயற்றப்பட்டது
1.குறுந்தலைப்பு, அளாவுகை, துவக்கம்
2.சொற்பொருள் விளக்கம்
இச்சட்டத்தில் அவ்வேளைக்கு வேறு விதத்தில் தேவைப்பட்டாலன்றி.
3. ஒரு பதிவு பெற்ற மருத்துவர் எப்போது கருக்கலைப்பு செய்யலாம்?.
பதிவு பெற்ற மருத்துவர் இருவர்;
விளக்கம்: கற்பழிப்பு செய்ததால் ஒரு பெண் கர்ப்பமுற்றால் அக்கர்ப்பதால் அடையும் கடுமையான மன துயரம் அப்பெண்ணின் மன நலத்திற்கு கொடுங்காயம் விளைவிக்கும் என அனுமானிக்கலாம்.
விளக்கம்: குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக குடும்ப கட்டுப்பாட்டு சாதனங்களை கணவனோ, மனைவியோ பயன்படுத்தி அதில் தோல்வி ஏற்பட்டு உருவாகும் வேண்டத்தகாத கர்ப்பம்... கர்ப்பமுற்ற பெண்ணின் மன நலத்திற்கு கொடுங்காயம் விளைவிக்கும் என அனுமானிக்கலாம்
3. இரண்டாவது உட்பிரிவில் சொல்லப்பட்டபடி கர்ப்பம் தொடர்வது ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் அபாயம் உள்ளதா எனத் தீர்மானிக்கும் போது அப்பெண்ணின் உண்மையான அல்லது முன் கூட்டி அறியக் கூடிய சூழ்நிலைகளை மனதில் கொள்ள வேண்டும்.
4.
4. கருக்கலைப்பு எந்த இடத்தில் செய்யப்பட்ட வேண்டும்
இச்சட்டத்தின் படியான கருக்கலைப்பு கீழ்கண்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் நடைபெறக் கூடாது.
a.அரசால் பராமரிக்கப்படும் மருத்துவமனை
தலைமை மருத்துவ அதிகாரி அல்லது மாவட்ட சுகாதார அலுவலரை தலைவராக கொண்ட மாவட்ட கமிட்டி அல்லது அரசாங்கம் இச்சட்டத்தின் பயன்பாட்டிற்காக ஒப்புதல் அளித்துள்ள இடம். அந்த மாவட்ட கமிட்டி தலைவரை சேர்த்து 3-க்கு குறையாது 5-க்கு அதிகப்படியாக இல்லாத உறுப்பினர்களைக் கொண்டு அரசாங்கம் அவ்வப்போது இதற்கென குறிப்பிட்டுள்ள போதிய மருத்துவப் பாதுகாப்புள்ள இடங்களில் இருக்க வேண்டும்.
பிரிவு 5
பிரிவு 3-ம் 4-ம் எப்போது பொருந்தாது?
6. விதிகள் உருவாக்கும் அதிகாரம்...
1. இந்த சட்டத்தின் பயன்களை சென்றடைய செய்வதற்காக தக்க விதிகளை அரசிதழில் அறிவிக்கை செய்வதன் மூலம் விதிகளை உருவாக்க அதிகாரம் உண்டு.
2. அவை மேலே கூறப்பட்டுள்ள அதிகாரத்திற்கு குந்தகம் விளைவிக்காத வகையில் கீழ்காண்பவைகளுக்காக உருவாக்கப்படும்.
3. அவ்வாறு உருவாக்கப்பட்ட விதிகளை மத்திய அரசு அவை உருவாக்கப்பட்ட உடன் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதன் ஒப்புதலுக்காக வைக்க வேண்டும். நடைபெறும் கூட்டத் தொடரிலோ அல்லது அதற்கடுத்தாற்போல் நடைபெறும் கூட்டத் தொடரிலோ வைக்கப்படும் அவ்விதிகள் குறித்து பாராளுமன்றம் ஏதாவது மாறுதல்கள் தெரிவித்திருப்பின் அம்மாறுதல்களுடனும் மாறுதல் தேவையில்லையென கருதினால் மாறுதல் இல்லாமலும் ஏற்கனவே அவ்விதியின் கீழ் செய்யப்பட்டவைகளுக்கு குந்தகம் விளைவிக்காமலும் நடைமுறைக்கு வரும்.
7.1 ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தும் அதிகாரம்...
3. ஒழுங்குமுறையில் தெரிவிக்கப்பட்டவாறு குறிப்பிட்ட நபர்கள் தவிர மற்றவர்களுக்கு தகவல் அளிப்பதை தடுத்தும் தெரிவிக்கப்பட்ட கொடுக்கப்பட்ட தகவல் குறித்தும் விதிகளை ஏற்படுத்தலாம்.
2. உட்பிரிவு 1(டி)ன்படி தகவல் அளிக்கப்பட வேண்டியவர் மாநிலத்தின் தலைமை அதிகாரி மருத்துவ மதிகாரி ஆவார்.
2. a) அவ்வாறு செய்யப்பட்ட மாநில அரசின் ஒழுங்குமுறைகள் உடனடியாக மாநில சட்ட சபையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட வேண்டும்.
3. வேண்டுமென்றே (1)வது விதியில் சொல்லப்பட்டுள்ளவைகளை மீறுபவர்கள் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படலாம்.
8. தன்னம்பிக்கை அடிப்படையிலான செயல்களுக்குப் பாதுகாப்பு...
சிவில் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எதுவும் பதிவு பெற்ற ஒரு அரசு மருத்துவரால் அச்சட்டத்தின்படி நன்னம்பிக்கையில் செய்கிற அல்லது செய்யவிருக்கிற செயல்களால் ஏற்பட்ட ஏற்படவிருக்கிற நஷ்டங்களுக்கு என எடுக்க முடியாது.
சர்வதேச அளவில் கருணைக் கொலையும் அதற்கான சட்டங்களும்...
மாணவர்கள் அரசியல் பேசலாமா ? கல்லூரி கல்வி இயக்குனரின் சுற்றறிக்கை சட்டபூர்வமானதா ??
தமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்தல் சட்டம், 2002
தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007