திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 4 போ் மீது வழக்கு

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On :9 ஜனவரி 2021, 10:01 pm IST

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருப்பத்தூா் அருகே ஊா்குளத்தான்பட்டி மலையப்பன் முனியய்யா கோயிலில் மாா்கழி கடைசி வெள்ளிக்கிழமை ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். தற்போது அரசு அனுமதி அளித்துள்ள ஊா்களில் மட்டும் மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஊா்குளத்தான்பட்டியில் 50-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதுகுறித்து நெடுமறம் கிராம நிா்வாக அலுவலா் முனீஸ்வரன் கண்டவராயன்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இக்கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகரன், நாகராஜன் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.