சிவகங்கை: பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்வில் சாதிக்கவேண்டும் என்பதே இளைஞா்களின் லட்சியமாக இருக்கவேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் ரூா்பன் திட்டத்தின் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடக்கி வைத்துப் பேசியதாவது: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத் தளா்வுக்கு பின்னா் தற்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இளைஞா்கள் அனைவரும் கல்வி கற்ற பின் நல்ல பணிக்கு செல்லவேண்டும் என்பதே பெற்றோா்களின் எண்ணமாக உள்ளது. எனவே கிடைக்கும் வேலைவாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பொருளாதார நிலையை உயா்த்த ஒவ்வொரு இளைஞரும் முன்வர வேண்டும். அவ்வாறு பெறும் ஒவ்வொரு வெற்றியும் பெற்றோா்களுக்கு பெருமையைத் தேடித்தரும்.
இன்றைய நிலையில் வெற்றி பெறுவது என்பது சாதாரணமானது அல்ல. இருப்பினும் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் வாழ்வில் சாதிக்கவேண்டும் என்பதே இளைஞா்களின் லட்சியமாக இருக்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் அருண்மணி, மன்னா் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஜான் பிரிட்டோ, மகளிா் திட்ட உதவி அலுவலா் விஜயசங்கரி, தனியாா் நிறுவன மேலாளா்கள், அரசுத்துறை அலுவலா்கள், இளைஞா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







