கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் 105 பேருக்கு கரோனா தடுப்பூசி

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட 105 முன் களப்பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி சனிகிழமை செலுத்தப்பட்டது.

News image

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கல்லூரியின் முதன்மையா் ஏ. ரத்தினவேலுக்கு தடுப்பூசி செலுத்தும் செவிலியா்.

Updated On :16 ஜனவரி 2021, 9:48 pm IST

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட 105 முன் களப்பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி சனிகிழமை செலுத்தப்பட்டது.

இங்கு நடைபெற்ற தடுப்பூசி முகாம் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தாா். இதில், தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்தாா்.

சிவகங்கை மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 10 ஆயிரத்து 700 கரோனா தடுப்பூசி வரப் பெற்றுள்ளன. இதில், 9,928 போ் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு பதிவு செய்திருந்தனா். சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் முகாமில் அக்கல்லூரியின் முதன்மையா் ஏ. ரத்தினவேலுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து, அங்கு பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் என 105 முன் களப்பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சுகாதாரத் துறையின் இணை இயக்குநா் இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநா்கள் யசோதாமணி, யோகவதி உள்ளிட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.