ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழ் ஆளுமைகள்: மரபும் நவீனமும்

தமிழ் ஆளுமைகள்: மரபும் நவீனமும் - இரா. காமராசு; பக்.156; ரூ.125; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை - 98; )044-2625 1968.

News image
Updated On :13 நவம்பர் 2016, 7:00 pm

இரா. காமராசு

தமிழ் ஆளுமைகள்: மரபும் நவீனமும் - இரா. காமராசு; பக்.156; ரூ.125; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை - 98; )044-2625 1968.
குருகுலக் கல்வி முறையின் கடைசி எச்சமாகவும், ஆசிரிய - மாணவ உறவின் உச்சமாகவும் விளங்கிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையில் தொடங்கி, பாரதி, பாரதிதாசன், விந்தன், கம்பதாசன், ஜெயகாந்தன், கா.மு. ஷெரீப், தி.க.சி. உள்ளிட்ட பதினைந்து அறிஞர்களின் தமிழ்ப்பணியை ஓரளவு விரிவாகவே பதிவு செய்திருக்கிறது இந்நூல்.
பெரும்புலவராக அறியப்பட்ட பின்னரும் கற்பதில் ஆர்வம் கொண்டிருந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கீழ்வேளூர் சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கற்றதும், அப்போது ஆசிரியருக்கு ஊதியம் தர பணம் இல்லாத நிலையில் தனது நூல் அரங்கேற்றத்தின்போது கிடைத்த கடுக்கன்களை விற்று ஆசிரியருக்குப் பணம் கொடுத்ததும் நெகிழ்வான நிகழ்வுகள். சாமி. சிதம்பரனார் 1921-இல் மதுரை தமிழ்ச்சங்கத்தில் பயிலும்போதே வெண்பா யாப்பில் அமைந்த "நளாயினி கதை' என்கிற காப்பியத்தை இயற்றினார் என்பது வியப்பளிக்கிறது. பிறப்பால் இஸ்லாமியராகவும், மொழியால் தமிழராகவும், நாட்டால் இந்தியராகவும், பண்பால் மனிதராகவும் வாழ்ந்த கவி. கா.மு. ஷெரீப், காஷ்மீரைப் பற்றி பாடியுள்ள பாடல் அவரது தேசப்பற்றின் அடையாளம். "இன்று தமிழ்நாட்டிற்கு வேண்டியவர்கள் யாரெனின், ஆன்றமைந்தடங்கிய கொள்கைச் சான்றோராகிய ஆராய்ச்சியாளர் பலரே' என்று தனிநாயக அடிகள் அன்று கூறியது இன்றும் பொருந்துகிறது. மொழியியல், இலக்கியம், கவிதை, கதை, கட்டுரை, திறனாய்வு முதலிய பலதுறை ஆளுமைகளைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.